வியாழன், 11 ஏப்ரல், 2013

விழியடா! தமிழா, விழியடா!


விழியடா! தமிழா, விழியடா!
புலியடா! நீயோ புலியடா!
அறநெறி அனைத்தையும் கற்றுணர்ந்து
மறநெறி முறைகளைப் பட்டுணர்ந்து
எரிமலை ஆகிட சரிநிலை இதுவென
புயலாய்ப் புயலாய் வெறி பிடித்து
                                                                                                            [விழியடா!]
தமிழைப் பழித்தவன் தலையில் கல்கொண்டு
கண்ணகிக்கு சிலை எழுப்பினான்!
தமிழை அழித்தவன் வலையில் விழுந்து
சாமி, சமயம் என்று மழுப்பினான்!
மானத்தமிழர் நாம் ஓய மாட்டோம்!
ஈனர் எவர் பின்னும் சாய மாட்டோம்!!
                                                                                                               [விழியடா]
தங்குதடையின்றி தமிழை நாம் பேசி
தரணி நடுங்க நடை பயிலுவோம்!
பொங்கு தமிழ் இனி மங்கிப் போகாமல்
சங்கம் வைத்தியங்க முயலுவோம்!
வீரத் தமிழர் நாம் அடங்க மாட்டோம்!
முட்டி எழுவோம்! இனி முடங்க மாட்டோம்!!
                                                                                                                [விழியடா]
நம் மொழி! தமிழ்மொழி! உயிருக்கு நேர்மொழி!
எதிர்ப்பவன் சிரத்தினை அழுத்துவோம்!
நம்மொழிக்கு நிகர் எம்மொழியும் இல்லை
புகுந்ததை எல்லாம் கொளுத்துவோம்!
முதலில் மொழியை மீட்டெடுப்போம்!
அதற்கோர் தேசிய பாட்டெடுப்போம்!!
                                                                                                                [விழியடா]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக