வியாழன், 11 ஏப்ரல், 2013

இழிநிலை தகர்க்க புலியென கிளம்பு...!!!


இழிநிலை தகர்க்க புலியென கிளம்பு...!!!

(*)
தமிழா! நீ பேசுவதும் எழுதுவதும் தமிழா..??? உன் மொழியின் பெருமை தெரியுமா உனக்கு..??? உலகின் மூத்த மொழி உன் மொழி...!!!  ஆனால், நீயோ ஆங்கிலத்தை சுமந்து திரிகிறாய்...???
(*)
உன் தாய்மொழி தமிழ்  இந்தியிடமும் ஆங்கிலத்திடமும் அடிமையாய் உள்ளது தெரியுமா.???
உன் தாய் மொழி அடிமை என்றால் நீயும் அடிமை தானே...???
(*)
உன் தேசிய மொழி இந்தி என்கிறான்... நீயும் அதை சட்டை செய்யாது ஏற்கிறாய்...!!! சிந்தனை செய்யும் அறிவில்லையா உனக்கு..???
(*)
தேசம் (Nation ) என்றால் என்ன...??? நாடு (Country ) என்றால் என்ன...??? ஏதாவது தெரியுமா உனக்கு..???
(*)
ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம்";, 'நம்மவர்" என்ற தேசிய இன ஒருமை உணர்வு. இவற்றின்படிதான் "இந்தி"யா தேசமாகச் சொல்லப்படுகிறதா...???

(*)மொழி தான் தேசத்தை பிரிக்கும்...!!! உன் மொழியும் "இந்தி"யனின் மொழியும் ஒன்றா..??? அப்படி இருக்கையில், இந்தியா எப்படி ஒரு தேசம் ஆகும்..???

(*)
இந்தியா ஒரு தேசமே இல்லை தெரியுமா உனக்கு..??? அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட இந்தியா ஒரு ஒன்றியம் என்றே  குறிக்கப்பட்டுள்ளது...!!! அப்படியெனில் தேசிய மொழி, தேசிய மலர், விலங்கு, தேசிய கீதம் இதெல்லாம் உன்னையும் என்னையும் ஏமாற்றி போலி முகத்தோடு அடிமைபடுத்தத்தானே...??? இவையெல்லாம் பெரிய அயோக்கியத்தனம் இல்லையா...???
(*)
ஐரோப்பாவில் எவனும் தன்னை "ஐரோப்பியன்" என்று சொல்லிக் கொள்வதில்லை...!!!
ஒரே எழுத்துருக்களைக் கொண்ட ஐரோப்பிய மொழிகள் தனித்தனியே தான் ஆட்சி, அதிகாரம் பெற்று தனித்தனி தேசங்களாக வாழ்கின்றன...!!! ஆனால் இங்கே எல்லோரும் இந்தியர்களாம்..!!! வேற்றுமையில் ஒற்றுமையாம்...!!! ஆனால், எனது மொழிக்கும் எனது கலைக்கும் மரியாதையே கிடையாதாம்...!!! என்னக்  கொடுமையடா இது...???
(*)
ஆனால்,  இங்கே நீயோ உன்னை "இந்தி"யன் என்று சொல்லிக் கொள்வது இழிவல்லவா...???
(*)
ஆரியர்கள் தான் திராவிடர் என்ற சொல்லாடலை உருவாக்கினர்... ஆரியர்கள் எழுதிவைத்த சாதி முறைகளை ஏற்காத "திராவிடர்கள்" அவர்கள் சொல்லிய "திராவிடத்தை" மட்டும் எப்படி ஏற்க முடிகிறது...??? நாம் யாரென்பதை எப்போதும் அடுத்தவர்தான் தீர்மானிக்க வேண்டுமா...??? உனக்கென்று சுய சிந்தனையே கிடையாதா...???
(*)
தமிழ் தான் திராவிடமாக திரிந்தது என்றால், திரிந்த திராவிடம் நமக்கு எதற்கு...??? திரியாத தமிழும் தமிழர்  என்பதுமே இருக்கட்டுமே...!!! திரிந்த பாலையே புறந்தள்ளும் நீங்கள் திரிந்த சொல்ல ஏன் புறந்தள்ளக் கூடாது...???
(*)
வீடு இழந்து வாசல் இழந்து நடைபாதையில் படுத்துறங்கும் ஒரு குடும்பம் தனக்கான வீடு அடைவதைவிட பெரிய தேவை இருக்க முடியாது...!!! நாடு இழந்து ஆட்சி இழந்து  நாதியற்று அண்டிப்பிழைத்து  கிடக்கும் தமிழினம் தனக்கான நாடு அடைவதைவிட பெரிய அரசியல் இருக்க முடியாது...!!!  ஈழ விடுதலையை "நாம் தமிழர்" கட்சி எல்லா இடங்களிலும் பேசுவதை விமர்சனம்
செய்பவர்களுக்கு இந்த அடிப்படை விடயம் கூட, ஏன் தெரியவில்லை...???
(*)
எல்லோரும் இந்தியர்கள்" என்று தானே நம்மை ஏமாற்றுகின்றனர்...??? எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று தானே புளுகுகின்றனர்...???  பின்பு  ஏன் நாம்  நம் தாய்மொழியில் இந்திய தேர்வுகளை எழுத இசைவு இல்லை...??? கேட்டால் ஆங்கிலம் இருக்கிறதே என்பான்... "ஆமாம்! ஆங்கிலம் இருக்கிறது, அப்புறம் ஏன் இந்தி இருக்கிறது...??? என்று நீங்கள் கேள்வி கேட்டதுண்டா...??? கேட்க முடியுமா...??? கேட்டால் சரியான பதில் கிடைக்குமா...????
(*)
இந்த மண்ணில்  தொடர்வண்டி நிலையங்களில் எதற்கு இந்தி மொழியில் எழுதி வைத்துள்ளனர்...??? இந்தி பேசும் மக்களின் வசதிக்காக என்றால், தமிழர் நாம் வடக்கே சென்றால் நமக்கு வசதி தேவை இல்லையா...??? இல்லை! ஏனென்றால், இந்தியா தமிழர்களை இந்தியர்களாக ஏற்கவே இல்லை..!!! இந்தியாவும் அதன் அரசும் துளியும் உன்னை மதிப்பதில்லை...!!!
(*)
இப்படி உன்னை மதிக்காத "இந்தி"யனையும் "இந்தி"யாவையும் நீ ஏன் மதிக்கிறாய்...??? அவ்வளவு மானங்கெட்டவனா நீ...??? இதுநாள்வரை உனக்கு போர்த்தப்பட்டிருந்த போலி இந்திய முகத்தைத் தூக்கியெறிய துப்பில்லையா...??? இன்னும் அதை சொல்லித் திரிந்தால் அது தப்பில்லையா...???
(*)
மூன்று கோடி பேர் மட்டுமே இருக்கின்ற சீக்கியன் மூன்று முறை தலைமை அமைச்சர்  பதவியை பெற முடிகிறது...!!! பத்து கோடி பேர் இருக்கும் தமிழரில் ஒருவன் கூட அப்பதவியைப் பெற்றிட முடியாதே ...!!! ஏன்...??? நீ மானங்கெட்டவன்...!!! இந்தியனைத் தலைவனாக ஏற்பாய்...!!! ஆனால், ஒருபோதும் இந்தியன் தமிழனைத் தலைவனாக ஏற்கவே மாட்டான்...!!!
(*)
நீ இதுவரை தமிழனையாவது தலைவனாக ஏற்றதுண்டா...??? ஆரியப் பார்ப்பனர்கள், மலையாள .கோ.ரா.,(எம்.சி.ஆர்.), தெலுங்கர் கருணாநிதி, கன்னட செயலலிதா, தெலுங்கர் விசயகாந்து- இவர்கள்தானே இதுவரை உன் தலைவர்கள்...???
(*)
தன்  வாழ்நாளில் பெரும்பகுதியை அரசியலில் திருமணம் கூட செய்யாமல் செலவழித்த அண்ணன்.தோல்.திருமாவளவன் ஐந்து தொகுதிகளில் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை...!!! ஆனால், விசயகாந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்...!!! ஏன் தெரியுமா...??? என்ன  தெரியுமா...??? நீ திருமா-விடம் சாதி பார்ப்பாய்...!! விசயகாந்திடம் சாதியைக் கேட்கக் கூட மாட்டாய்...!!! தமிழனிடம் சாதி கேட்கும் நீ தெலுங்கன்,மலையாளிகன்னடனை "தலைவா!"என்று ஊளையிடுகிறாய்...!!! பார்த்தாயா உன் அரசியல் அடிமுட்டாள்தனத்தை...!??
(*)
...!!! தமிழ் இளைஞனே...!!! பந்துமட்டை விளையாட்டை(கிரிக்கெட்) பார்த்து பொழுதைப் போக்குகிறாயே...!!! நீ எவ்வளவு சிறந்த ஆட்டக்காரனாக இருந்தாலும் அதில் சேர்ந்து விளையாட முடியுமா..??? உன்னை சேர்த்துக்கொள்வார்களா...??? சேர்க்கவே மாட்டார்கள்...!!! அது தெரியுமா உனக்கு...???
(*)
உனக்கு ஒரு உண்மை சொல்லட்டுமா...??? இதுநாள்வரை ஆரியப்பார்ப்பனர் மட்டுமே, தமிழ்நாட்டில் இருந்து பந்துமட்டை அணிக்கு(இந்திய அணி-உலகளவிலான போட்டிகளில்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்...!!! அவர்கள் மட்டும் தான் சிறந்து விளையாடுவார்களா...??? பார்ப்பனரை தமிழர்களாக ஏற்க முடியாதே...!!! இதில் பெரிய திருட்டுத்தனம் இருப்பது தெரியவில்லையா உனக்கு...??? நீ தெருவில் விளையாடப் பிறந்தவன்தானே...!!! இதையெல்லாம் நீ எங்கே சிந்திக்கப்போகிறாய்...??? போ..!!! போய் அந்த விளையாட்டைப் பார்த்து கை தட்டு...!!! நீ திருந்தவே மாட்டாயா..???
(*) கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி, இரத்தம் சிந்தி நாம் பட்டதெல்லாம் போதாதா...??? இனியாவது உன்னால் சிந்திக்க முடியாதா..??? சிந்திக்கும் உணர்வே கிடையாதா...???
(*)
எவன் ஒருவன் தன்  தாய்மொழியில் ஒவ்வொன்றையும் படிக்கிறானோ, அவனே எதை ஒன்றையும் புதிதாய், எளிதாய்க்  கண்டறிய முடியும்...!!! இன்னும் எத்தனை நாளைக்கு தான், நாம்  அடுத்தவனின்  கண்டுபிடிப்பையே படித்துக்கொண்டு இருப்பது...??? சிந்திக்க வேண்டாமா..???
(*)
இந்த மண்ணில் எந்த கட்சியாவது உன்னை சிந்திக்கச் சொன்னதுண்டா...??? அவர்களுக்கு சொல்லும் துணிச்சலுண்டா...??? நீ சிந்தித்தால் அவர்களைச் சீண்டமாட்டாய் என்பது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்...!!! இதை சொல்லும் துணிவும் வலுவும் "நாம் தமிழர்" கட்சிக்கு மட்டுமே உண்டு...!!! சிந்திப்பீர்  தமிழரே..!!! சிந்திப்பீர்...!!! இனியாவது சிந்திப்பீர்...!!!
(*)
புலி உறுமும்; சிங்கம் சீறும்; நாய் குரைக்கும்..!!! உறுமும் மொழியைத்(ஒலியைத்) தடுத்து  அடிமைப்படுத்தினால் புலியும் அடிமை தானே...??? சீறும் மொழியை அடிமைப்படுத்தினால் சிங்கமும் அடிமை தானே...??? குரைக்கும் மொழியை அடிமைப்படுத்தினால் நாயும் அடிமை தானே...??? அடேய்..!!! தமிழா..!!! உன் தாய்மொழி தமிழை அடிமைப்படுத்தினால் நீயும் அடிமைதானடா...??? இது ஏன் உனக்கு இன்னும் விளங்கவில்லை...???
(*)
உன் தாய்மொழியில் நீ வழிபட முடியாது, வழக்காட முடியாது, ஆட்சி செய்ய முடியாது, படிக்க முடியாது..!!! ஆனால், உனக்கு தொடர்பே இல்லாத "இந்தி"யில் நீ இவையெல்லாம் செய்துகொள்ளலாம்...!!! அப்படியென்றால், அந்நிய மொழியைவிட உன் மொழி அடிமை தானே...??? இதை நீ எப்போது உணர்வாய்...???
(*) "
மொழிதானே ? இதுக்கு போய் இப்படியா..???" என்பார்கள்...! மொழிதானே நீ பேசிய முதல் சொல்லின் வழி...??? மொழிதானே உன்னை யாரென்று இந்த உலகம் பார்க்கவும் நீ இந்த உலகைப் பார்க்கவும் உதவுகின்ற விழி...??? மொழிதானே உனது எனது அடையாளம்...???தாயைவிடவும் "தாய்மொழி"தானே நம்மோடு வாழ்நாள் முழுதும் உடனிருக்கும்...???
(*)"
கேள்விகளைக் கேட்க செய்யாத படிப்பு, குப்பைக்குச் சமம்...!!!". உன் குப்பை அறிவைக் கொளுத்திப்போடு...!!! அடிமைப்படுத்தப்பட்டு, அதுவே தெரியாமல் வளர்க்கப்பட்டவன் நீ..!!! முதலில் உன்னை அடிமை என்பதை உணர்...!!! அப்போதுதான் அடிமைத்தனத்தை அழிக்க போராடமுடியும்...!!! இப்போது தெரிந்துகொண்டாயா...??? சரி..!!! எப்போது உடைக்கப் போகிறாய் இந்த அடிமை விலங்குகளை...??? எப்படி உடைக்கப் போகிறாய்...??? நாதியற்ற பிள்ளைகள் "நாம் தமிழராய்" இருக்கிறோம்...!!! நீயும் வந்து எம்மோடு சேர்...!!! படையைப் பெருக்குவோம்...!!! தடையை நொறுக்குவோம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக